ஈஸ்டர் தாக்குதல் தற்கொலை குழுக்களை ராஜபக்சே சகோதரர்கள் தான் உருவாக்கினார்கள் : முன்னாள் அமைச்சர் கருத்து

"ஈஸ்டர் தாக்குதல் தற்கொலை குழுக்களை" ராஜபக்சே சகோதரர்கள் தான் உருவாக்கினார்கள் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கருத்து தெரிவித்து உள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தற்கொலை குழுக்களை ராஜபக்சே சகோதரர்கள் தான் உருவாக்கினார்கள் : முன்னாள் அமைச்சர் கருத்து
Published on

கொழும்பு,

இலங்கையில் ஈஸ்டர் அன்று தாக்குதலை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத்தை போன்று பல்வேறு இஸ்லாமிய குழுக்களை கேத்தபய ராஜபக்சேவும், அவரது சகோதரரான மகிந்த ராஜபக்சேவுமே உருவாக்கியதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ், முஸ்லிம் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தவே இவ்வாறான குழுக்களை அவர்கள் உருவாக்கியதாக தெரிவித்த மேர்வின் சில்வா, சிங்கள பௌத்த நாடான இலங்கையை மாற்றியமைக்க யாராவது முயற்சி செய்தால், இனப்படுகொலை செய்தாவது நாட்டை பாதுகாக்க தயங்க மாட்டேன் எனவும் அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com