‘கல்வி, கலாசாரம், அறிவு மேம்பாடு மனிதனை மேம்படுத்த உதவும்’; துபாய் ஆட்சியாளர் டுவிட்டரில் தகவல்

துபாய் ஆட்சியாளரும், அமீரக துணை அதிபரும், பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
‘கல்வி, கலாசாரம், அறிவு மேம்பாடு மனிதனை மேம்படுத்த உதவும்’; துபாய் ஆட்சியாளர் டுவிட்டரில் தகவல்
Published on

கல்வி, கலாசாரம் மற்றும் அறிவு மேம்பாடு உள்ளிட்டவை மனிதனை மேம்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கினை வகித்து வருகின்றன. மேலும் இவை ஒரு மனிதனை மற்றொருவரிடம் இருந்து வேறுபடுத்த முடியாது. இதுமட்டுமல்லாமல் சமயங்கள் உள்ளிட்ட எத்தகைய பிரிவினாலும் வேறுபடுத்திக் காட்ட முடியாதது.

வாழ்க்கை இதனை எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது. மனிதாபிமானத்தின் மூலம் ஒருவர் சமூகத்துக்கு தேவையான கடமையை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com