உலகின் முதல் டிரில்லியனர் ஆகும் எலான் மஸ்க்

டெஸ்லா,ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை எலான் மஸ்க் நடத்தி வருகிறார்
Elon Musk
Published on

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 81.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. இதனிடையே, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தற்போது பொது பங்கு வெளியீட்டில் இறங்கி உள்ளது. இந்த ஐபிஓ, எலான் மஸ்க்கை முதல் டிரில்லியனர் என்ற சாதனையை நோக்கி கொண்டு சென்றுள்ளது.

கற்பனை செய்ய முடியாத தொகை

எனினும், தற்போதைய நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் ஐபிஒ குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எலான் மஸ்கின் பங்கு மதிப்பு மட்டும் 743 பில்லியன் டாலர் முதல் 866.5 பில்லியன் டாலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், இன்று சந்தை முடிவதற்குள் அதிகாரப்பூர்வமாக ‘டிரில்லியனர்’ அந்தஸ்தை எலான் மஸ்க் பெறுவார். 1 டிரில்லியன் டாலர் என்பது எளிதில் எட்ட முடியாத அளவுக்கு மிகப்பெரிய தொகையாகும். எலான் மஸ்க் தினமும் 10 லட்சம் டாலர் செலவிட்டாலும், 1 டிரில்லியன் டாலரை முழுமையாக செலவிட அவருக்கு 2,740 ஆண்டுகள் தேவைப்படும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் யார்?

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில், தற்போது 304 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ள கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ்-ஐ விட மஸ்க் மூன்று மடங்குக்கும் அதிகமாக செல்வந்தராக இருப்பார். உலக வரலாற்றில் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராகவும் மஸ்க் இடம்பிடிக்க உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com