சைபர் தாக்குதலை நடத்துவோர் எதிராக தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

தங்கள் உறுப்பு நாடுகளின் மீது சைபர் தாக்குதல் நடத்தும் எந்தவொரு நாடு, நிறுவனம் அல்லது நபர் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு செய்துள்ளன.
சைபர் தாக்குதலை நடத்துவோர் எதிராக தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
Published on

பிரெஸ்ஸல்ஸ்

தங்கள் உறுப்பு நாடுகளின் மீது சைபர் தாக்குதல் நடத்தும் எந்தவொரு நாடு, நிறுவனம் அல்லது நபர் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளன.

செப்டம்பர் மாதத்தில் ஜெர்மன் நாட்டில் தேர்தல் வரவுள்ளன. ரஷ்யர்கள் அமெரிக்க தேர்தல்களிளும், பிரெஞ்சு தேர்தல்களில் தலையிட்ட விஷயத்தால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

சைபர் தாக்குதல் நடத்தும், தனிநபர்கள், நிறுவனம் அல்லது அரசுகள் மீது பயணத்தடை, சொத்து முடக்கம் அல்லது ஒட்டுமொத்தத்தடை விதிக்கப்படலாம். தாக்குதலின் வீர்யத்தைப் பொறுத்து நடவடிக்கையிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com