இரண்டே நாட்களில் 120 ரஷிய தூதர்களை வெளியேற்றி ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை!

உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 230க்கும் மேற்பட்ட ரஷிய தூதர்களை வெளியேற்றியுள்ளன.
இரண்டே நாட்களில் 120 ரஷிய தூதர்களை வெளியேற்றி ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை!
Published on

பிரஸ்ஸல்ஸ்,

ரஷியா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 230க்கும் மேற்பட்ட ரஷிய தூதர்களை தங்கள் நாடுகளிலிருந்து வெளியேற்றியுள்ளன.

ஏப்ரல் 5 அன்று இத்தாலி, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகியவை ரஷிய தூதர்களை வெளியேற்றுவதில் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளுடன் இணைந்தன. கடந்த 48 மணி நேரத்தில் 120க்கும் மேற்பட்டோர் அனுப்பப்பட்டுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வாரம் புச்சா நகரை உக்ரேனிய படைகள் மீண்டும் கைப்பற்றின. அந்நகரம் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஏறக்குறைய ஒரு மாதமாக அந்த நகரத்திற்கு உக்ரேனியர்கள் யாரும் செல்ல முடியவில்லை.

உக்ரைன் நாட்டின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைக்கு பதிலடியாக 40 ரஷிய தூதர்களை ஜெர்மனி வெளியேற்றி உள்ளது. இதன்படி அவர்கள் 5 நாட்களுக்குள் ஜெர்மனியை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக 30 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியுள்ளோம்" என இத்தாலி வெளியுறவு மந்திரி லூய்கி டி மியாவ் தெரிவித்துள்ளார்.

ஆனால் புச்சா மற்றும் பிற இடங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை ரஷிய அதிகாரிகள் மறுத்துள்ளனர். பழிக்குப் பழி நடவடிக்கையாக லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியாவில் இருந்து 10 தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக ரஷியா கூறியது.

"ரஷியாவின் ராணுவ ஆக்கிரமிப்புக்கு" பதிலளிக்கும் வகையில் ரஷிய தூதரை வெளியேற்றுவதாக லிதுவேனியா கூறியது.

15 ரஷிய "உளவுத்துறை அதிகாரிகளை" வெளியேற்றுவதாக டென்மார்க் கூறியது.மூன்று ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக ஸ்வீடன் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.பிரான்ஸ் நேற்று 35 ரஷிய தூதர்களை வெளியேற்றியது.

இப்படி இரண்டே நாளில், ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகள் 120 ரஷிய தூதர்களை வெளியேற்றி ரஷியாவை கதிகலங்க செய்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com