தாய்லாந்து: பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள நாடு தாய்லாந்து.
தாய்லாந்து: பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் பலி
Published on

பாங்காக்,

ஆசியாவில் அமைந்துள்ள நாடு தாய்லாந்து. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும் , கிளர்ச்சிக்குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

தாக்குதல்

இந்நிலையில், அந்நாட்டின் நராதிவெட் மாகாணம் புகிடா சமி நகரில் ராணுவ சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் கடந்த புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர்.

பைக்கில் வந்த 10க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், சோதனைச்சாவடியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com