பாகிஸ்தான் முன்னாள் அதிபர் உடல்நல குறைவால் காலமானார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முகமது ரபீக் தரார் உடல்நல குறைவால் இன்று காலமானார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் உடல்நல குறைவால் காலமானார்
Published on

லாகூர்,

பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்தவர் முகமது ரபீக் தரார். அந்நாட்டின் 9வது அதிபராக பதவி வகித்த அவர், கடந்த 1998ம் ஆண்டு ஜனவரியில் இருந்து 2001ம் ஆண்டு ஜூனில் ராஜினாமா செய்யும் வரை அதிபராக இருந்துள்ளர். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரபீக் இன்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு அரசின் மூத்த தலைவர்கள், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com