பிரான்சில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

பிரான்சில் கடந்த 24- மணி நேரத்தில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்சில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

பாரிஸ்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. பிரான்சு பொது சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19,952- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரான்சில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்து 55 ஆயிரத்து 968- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 122 பேரும் இதுவரை 86,454- பேரும் பிரான்சில் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் இதுவரை 29 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com