முதல்முறையாக ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்ற பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள்

ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல கப்பல் ஒன்றுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது.
முதல்முறையாக ஹார்முஸ் நீரிணையை கடந்து சென்ற பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள்
Published on

மத்திய கிழக்கு போரில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கப்பல் போக்குவரதுக்கு முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கபப்ட்டதால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜலசந்தி வழியாக அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் கடந்து செல்ல ஈரான் தடை விதித்து உள்ளது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல கப்பல் ஒன்றுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்களுக்கு ஈரான் விதிக்க உள்ள நிபந்தனைகள் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயற்சிக்கும் கப்பல்கள் இனி ரகசியமாக அடையாள குறியீடுகளை பயன்படுத்த வேண்டும்.

சீன யுவான் அல்லது கிரிப்டோகரன்சிகளில் 2 மில்லியன் டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை ஈரான் புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடையே ஒரு நிறுவனம் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், மத்திய கிழக்குப் போர் தொடங்கிய பிறகு, முதல்முறையாக பிரான்ஸ் & ஜப்பானின் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து பாதுகாப்பாக வெளியேறின.

ஈரான் அனுமதியுடன் பிரான்சின் சி.எம்.ஏ சிஜிஎம் கிரபி மற்றும் ஜப்பானின் ஷோகர் எல்.என்.ஜி கப்பல்கள் நீரிணையை கடந்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com