பிரான்ஸ் வீரர் பலி: லெபனான் அரசுக்கு இம்மானுவேல் மேக்ரான் விடுத்த எச்சரிக்கை

இந்த தாக்குதலுக்கான பொறுப்பு ஹிஸ்புல்லாவையே சாரும் என்பதை அனைத்து தகவல்களும் சுட்டிக்காட்டுகின்றன.
பிரான்ஸ் வீரர் பலி: லெபனான் அரசுக்கு இம்மானுவேல் மேக்ரான் விடுத்த எச்சரிக்கை
Published on

பாரிஸ்,

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மொன்டாபனை சேர்ந்த 17வது பாராசூட் பொறியாளர் படைப்பிரிவின் சார்ஜென்ட் தலைவர் புளோரியன் மாண்டோரியோப் இன்று காலை தெற்கு லெபனானில் லெபனானில் ஐக்கிய நாடுகளின் இடைக்கால படை அமைப்புக்கு எதிரான தாக்குதலின் போது வீரமரணம் அடைந்தார்.

புளோரியன் உடன் பணியாற்றிய மூன்று சக வீரர்கள் காயமடைந்து மீட்கப்பட்டுள்ளனர். நமது தேசம் மரியாதையுடன் தலைவணங்குகிறது, மேலும் நமது வீரர்களின் குடும்பங்களுக்கும், லெபனானில் அமைதிக்காக பணியாற்றும் நமது அனைத்து இராணுவத்தினருக்கும் தனது ஆதரவை தெரிவிக்கிறது.

இந்த தாக்குதலுக்கான பொறுப்பு ஹிஸ்புல்லாவையே சாரும் என்பதை அனைத்து தகவல்களும் சுட்டிக்காட்டுகின்றன. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, லெபனானில் ஐக்கிய நாடுகளின் இடைக்கால படை அமைப்புடன் இணைந்து தங்கள் பொறுப்புகளை ஏற்குமாறு லெபனான் அதிகாரிகளை பிரான்ஸ் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com