2022-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்...! பெண் பாபா வாங்கா கணிப்பு

2021-ஆம் ஆண்டின் இறுதி தருவாயில் உள்ளோம். வரப்போகும், 2022-ஆம் ஆண்டாவது சிறப்பாக அமைய வேண்டும் என்பது ஒட்டுமொத்த மனித இனத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
2022-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்...! பெண் பாபா வாங்கா கணிப்பு
Published on

லண்டன்,

பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாத இவர் தனது 85 வயதில் 1996-ஆம் ஆண்டு காலமானார். இவர் அங்கு, பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார். இவர் 50 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பலித்தும் உள்ளன, நடந்தும் உள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாம்ஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 14-12-1503-ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவரது வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும், விபத்துக்களையும், கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன் தான் அவரது நூலை அணுக வேண்டியிருக்கிறது.

அதுபோல் தான் இந்த பெண் பாபா வாங்கா. இவரது கணிப்புகளில் அதிகம் பலித்து உள்ளன.

2016 ஆண்டு மிகப்பெரிய ஐஎஸ் அமைப்பு போர் தொடங்கும், ஐரோப்பியர்களுக்கு எதிராக ரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவர். அவர்கள் 2043 ஆம் ஆண்டு ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் ஆட்சியை நிறுவுவார்கள் என கூறினார்.

அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். அதேபோன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது. அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்று கணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார். பின்னர், 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் எனவும் கணித்தார். இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார், அதுவும் நடந்தது.

இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர். 2019 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் பாபாவை பின்பற்றுவோர் அவரது கணிப்பை நம்புகின்றனர்.

2020 ஆம் ஆண்டு குறித்த அவரது கணிப்புகளில் சில நடந்து உள்ளன

* 2020ஐ பொருத்தவரை, வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் ஐரோப்பிய மக்களுக்கும் கெட்ட நேரம்தான்

* 2020ல் ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சி நடக்கும். மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்கும் திறன் இழந்து மன நலம் பாதிக்கப்படலாம் அல்லது உயிரிழக்கலாம் என்று கூறி இருந்தார்.

ஐரோப்பா காணாமல் போகும் என்றும் பாபா கூறியிருக்க, பாபா கூறியது பிரெக்ஸிட்டை மனதில் வைத்துதான் என்றும் மக்கள் கருதுகின்றனர். அத்துடன் 2020ல் ஐரோப்பாவை தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களுடன் தாக்குவார்கள் என கூறி இருந்தார்.

2021 ஆம் ஆண்டு குறித்தும் வருங்காலம் பற்றிய கருத்துக்கள் பல பலித்து உள்ளன. 2021 ஆம் ஆண்டில் இந்த உலகம் சில பேரழிவுகளை சந்திக்கும் என்றும், அமெரிக்கவின் 45- ஆவது அதிபர் ( டொனால்ட் டிரம்ப் ) மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்றும் கூறினார் அது பலித்தது.

2021ஆம் ஆண்டின் இறுதி தருவாயில் உள்ளோம். வரப்போகும், 2022 ஆம் ஆண்டாவது சிறப்பாக அமைய வேண்டும் என்பது ஒட்டுமொத்த மனித இனத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பாபா வாங்கா 2022 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் தற்போது வைரலாகி உள்ளன.

* வாங்கா பாபாவின் கூற்றுப்படி, 2022 இல் உலகின் பூகம்பங்கள் மற்றும் சுனாமிகளின் ஆபத்து அதிகரிக்கும். முன்னதாக 2004 சுனாமியை முன்னறிவித்து இருந்தார் வாங்கா.

* மேலும் ஆஸ்திரேலியாவுடன் பல ஆசிய நாடுகளும் தீவிரமான போர்களால் தாக்கப்படும் என்று கணித்துள்ளார்.

* இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் கடலோரப் பகுதிகளை மூழ்கடிக்கும் பெரும் சுனாமி உருவாகும் என கணித்து உள்ளார்.

* சைபீரியாவில் இதுவரை உறைந்திருந்த ஒரு புதிய கொடிய வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள். புவி வெப்பமடைதலின் பேரழிவு விளைவுகள் காரணமாக, வைரஸ் விரைவாக கட்டுப்பாட்டை மீறி பரவும் என கணித்துள்ளார்.

* இந்தியாவில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் வெட்டுக்கிளி தாக்குதல்களால் நாடு பாதிக்கப்படும், இது பயிர்கள் மற்றும் விவசாய நிலங்களை அழிக்க வழிவகுக்கும், பஞ்சத்தை ஏற்படுத்தும் எனவும் கணித்து உள்ளார்.

* பூமியில் உள்ள வாழ்க்கையை ஆராய வேற்றுகிரகவாசிகள் ஓமுவாமுவா என்ற செயற்கைக்கோளை அனுப்புவார்கள், மேலும் அவை மனிதர்களைத் தாக்கி சிறைப்படுத்தக்கூடும்.

* 2130 ஆம் ஆண்டளவில், வேற்றுகிரகவாசிகளின் உதவியுடன் நீருக்கடியில் எப்படி வாழ்வது என்பதை இந்தியா கற்றுக் கொள்ளும் என்றும் அவர் கணித்துள்ளார்.

* 2022-ல் உலகின் பெரிய நகரங்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும். ஆறுகள் மாசுபடுவதால் புதிய நீர் ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

* 2022 இல், மக்கள் ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவார்கள். மொபைல் பார்க்கும் நேரம் அதிகரிக்கும் மற்றும் மக்கள் கற்பனையை யதார்த்தத்துடன் குழப்பத் தொடங்குவதால் ஆபத்து உருவாகும் என கணித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com