

பெர்லின்
சீனாவின் உகான் மாகாணத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் எளிதாக ஒருவரிடம் இருந்து பரவியதால், உலகில் பல்வேறு நாடுகளில் பரவியது. பல லட்சம் உயிர்கள் பலியானது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இதனால் அதைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, இந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முக்கிய நடவடிக்கையாக முகக் கவசம் அணிவது இருந்து வருகிறது.இதன் காரணமாகவே உலக நாடுகள் அனைத்தும் பொதுவெளியில் வரும் குடிமக்கள் முகக்கவசம் அணியவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளன. அதேபோல, உலக நாட்டின் தலைவர்களும் முகக் கவசத்துடனேயே பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், ஜெர்மன் அதிபர் ஏஞ்ஜலா மெர்கல், நாடாளுமன்ற அவையில் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளார்.திடீரென முகக்கவசம் அணியாதது குறித்து நினைவுக்கு வந்த அவர், பதறிப் போய் முகக்கவசத்தை வாங்கி அணிகிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.