எச்-1பி விசா கட்டணம் உயர்வு: அமெரிக்க கோர்ட்டில் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக வழக்கு


எச்-1பி விசா கட்டணம் உயர்வு: அமெரிக்க கோர்ட்டில் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக வழக்கு
x

எச்-1பி விசா கட்டணம் உயர்வு விவகாரத்தில் அமெரிக்க கோர்ட்டில் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எச்-1பி விசா மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவை பயன்படுத்தி 3 ஆண்டுகளுக்கு அங்கு தங்கி பணிபுரியலாம். தேவைப்பட்டால் அடுத்தடுத்த 3 ஆண்டுகளுக்கு அதனை நீட்டிக்க முடியும்.

அதன்படி தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் என 65 ஆயிரம் விசாக்களை அரசாங்கம் வழங்கி வந்தது. அதேபோல் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் படித்த 20 ஆயிரம் பேருக்கும் எச்-1பி விசா வழங்கப்பட்டது. எனவே சுமார் 13 லட்சம் வெளிநாட்டினர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எச்-1பி விசா கட்டணத்தை ரூ.9 லட்சத்தில் இருந்து சுமார் ரூ.90 லட்சமாக டிரம்ப் உயர்த்தினார். அவரது இந்த அறிவிப்பு அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

1 More update

Next Story