பாகிஸ்தானில் இந்து தொழிலதிபர் சுட்டு கொலை

பாகிஸ்தானில் நில தகராறில் இந்து தொழிலதிபர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் இந்து தொழிலதிபர் சுட்டு கொலை
Published on


கராச்சி,

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்கு கோட்கி மாவட்டத்தில் சத்தன் லால் என்ற இந்து தொழிலதிபருக்கு, 2 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை ஒப்படைத்து விட்டு இந்தியாவுக்கு ஓடும்படி, முஸ்லிம்கள், சத்தன் லாலுக்கு தொல்லை கொடுத்து வந்தனர்.

இதற்கு சத்தன் லால் மறுக்கவே, 8 ஆண்டுகளுக்கு முன் அவர் மீது துப்பாக்கி சூடு நடந்தது. அதில் படுகாயத்துடன் சத்தன் லால் உயிர் தப்பினார். இந்நிலையில், சத்தன் லால் நிலத்தில் பருத்தி ஆலை மற்றும் மாவு ஆலை அமைப்பதற்கான துவக்க விழா நடந்தது.

இதற்கு வந்த சிலர், சத்தன் லாலை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பினர். இதனை கண்டித்து, கோட்கி மாவட்டத்தில் இந்துக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கைது செய்ய கோரி போலீஸ் நிலையம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர் என போலீசார் கூறியதை அடுத்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. சிந்து மாகாணத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com