ஈரான் போரால் அமெரிக்காவுக்கு எவ்வளவு செலவு...?

வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் தாக்குதல் ஏவுகணைகள் கையிருப்பு தேவையான அளவிலேயே இருப்பில் உள்ளது.
ஈரான் போரால் அமெரிக்காவுக்கு எவ்வளவு செலவு...?
Published on

வாஷிங்டன்,

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்டுள்ள செலவு விவரம் குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. நடவடிக்கையின் முதல் 24 மணிநேரத்தில் (பிப் 28-ந்தேதி) ரூ.7 ஆயிரத்து 166 கோடி (779 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ராணுவ முன்னேற்பாடுகளான விமானங்களை மாற்றி நிலைநிறுத்துதல், 12-க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்களை பணியில் ஈடுபடுத்துதல், பிராந்திய ஆதாரங்களை இயக்குதல் ஆகியவற்றிற்கு கூடுதலாக ரூ.5,796 கோடி (630 மில்லியன்) செலவாகிய தாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் விமானத்தாங்கி கப்பலான ஜெரால்டு போர்ட்-ஐ இயக்குவதற்காக ஒருநாளுக்கு ரூ.60 கோடி (6.5 மில்லியன்) செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவின ரீதியாக இது தாங்க முடியாத நிலை அல்ல. அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட் ரூ.92 லட்சம் கோடி (1 டிரில்லியன் டாலர்கள்) அளவில் உள்ளது.

அதை ரூ.138 லட்சம் கோடி(1.5 டிரில்லியன்) ஆக உயர்த்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. ஆனால், உண்மையான சிக்கல் ஆயுத கையிருப்பே ஆகும். தேசபக்தன், எமன், வேட்டைக்காரன் போன்ற வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் தாக்குதல் ஏவுகணைகள் கையிருப்பு தேவையான அளவிலேயே இருப்பில் உள்ளது. இதனால் நீண்ட காலம் தாக்குதலை தொடர முடியாது. இவை நூற்றுக்கணக்கில் தினமும் தயாரிக்கப்பட முடியாது என்பதால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என ராணுவத்துறை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com