ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்கா... இந்தியா எழுப்பிய கேள்வி; டிரம்ப் கூறியது என்ன?


ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்கா... இந்தியா எழுப்பிய கேள்வி; டிரம்ப் கூறியது என்ன?
x

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

வாஷிங்டன்,

கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் பணத்தை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா பயன்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

அதேபோல், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வரி விதித்துள்ளார். அந்த வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். மேலும், இந்த வரியை உயர்த்துவேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் இந்த அறிவிப்பிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷியாவிடமிருந்து யுரேனியம், உரம், வேதிப்பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்வதாகவும், அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுவதாகவும் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஷியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வது குறித்து டிரம்ப் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப்,

ரஷியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வது குறித்து எனக்கு தெரியாது. இது குறித்து நான் ஆய்வு செய்துவிட்டு உங்களிடம் முழு விவரத்தையும் தெரிவிக்கிறேன்

என்றார்.

1 More update

Next Story