தென் கொரியா: பயிற்சி விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் 3 விமானிகள் உயிரிழப்பு!

தென்கொரியாவில் பயிற்சி விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் 3 விமானிகள் உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சியேல்,

தென் கொரிய விமானப் படையின் இரண்டு பயிற்சி விமானங்கள் நடு வானில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மூன்று விமானிகள் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தென் கொரியாவின் தென்கிழக்கு நகரமான சச்சியோனில் உள்ள விமானப்படை தளத்திற்கு அருகே பிற்பகல் 1.35 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் விமானப்படை இதுவரை உயிர் சேதம் குறித்து தெரிவிக்கவில்லை. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்து வருவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். மீட்புப்பணிகளில் முழுவீச்சில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com