தென் கொரியாவில் 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவிக்கம் அதிகரிப்பு

தென் கொரியாவில் 2023-ம் ஆண்டிலும் பணவிக்கம் அதிக அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவிக்கம் அதிகரிப்பு
Published on

சியோவில்,

தென் கொரியாவில் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 2022-ம் ஆண்டில் நுகர்வோர் விலை குறியீடு 107.71 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 5.1 சதவீதம் அதிகம் என்றும் 1998-ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்டுள்ள மிக அதிகமான பதிவு என்றும் கூறப்படுகிறது.

தென் கொரிய மக்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி தங்கள் அன்றாட செலவுகளை குறைப்பது குறித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் தென் கொரியாவில் 2023-ம் ஆண்டிலும் பணவிக்கம் அதிக அளவில் இருக்கும் என்றும், மின்கட்டணம் 50 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com