‘அவமதிப்பு’ பேஸ்புக் தடை விதித்தது குறித்து டிரம்ப் கருத்து

டொனால்டு டிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது.
‘அவமதிப்பு’ பேஸ்புக் தடை விதித்தது குறித்து டிரம்ப் கருத்து
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியை தழுவினார். இதனையடுத்து ஜோ பைடன் வெற்றிபெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.

ஆனால் டிரம்ப் அவரது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. தேர்தலில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ளாத அவர் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டார். அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள கேப்பிட்டல் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பேஸ்புக் , டுவிட்டர் போன்ற சமூகவலைதள பக்கங்கள் டிரம்பின் கணக்குகளை முடக்கின .

வன்முறை சம்பவத்தை தொடர்ந்து டிரம்பின் டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக தடை செய்தது . ஆனால் , பேஸ்புக் நிறுவனம் தற்காலிகமாக தடைவிதித்தது. இந்நிலையில், டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகரித்துள்ளது.

அதன்படி டொனால்டு டிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் விதித்த தடை குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், தனக்கு வாக்களித்தவர்களுக்கு செய்யப்பட்ட அவமரியாதை எனக்கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com