ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது
ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
Published on

தெஹ்ரான்,

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது

இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் சயது காண்டின், குவாசர், வனக் சதுர்க்கம், மொடஹரி ஸ்டிரீட் உள்ளிட்ட பகுதியில் இஸ்ரேல் இன்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com