முதல் முறையாக குரில் தீவுக்கு சென்ற புதின்; ஜப்பான் கண்டனம்

ஜப்பான் உரிமை கோரி வரும் குரில் தீவுக்கு முதல்முறையாக ரஷிய அதிபர் புதின் நேரில் சென்றதால் இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.


முதல் முறையாக குரில் தீவுக்கு சென்ற புதின்
Published on

டோக்கியோ,

2 ஆம் உலகப்போரின் போது சோவியத் யூனியனால் கைப்பற்றப்பட்ட இத்தீவுக்கு புதின் சென்றது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜப்பான் பிரதமர் சனாயே தகாய்ச்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குரில் தீவு

பசிபிக் பெருங்கடல் பகுதியில் ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள குரில் தீவுகளை ஜப்பான் அரசு உரிமைகோரி வருகின்றது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பானிடம் இருந்து பல்வேறு தீவுகள் ஒன்றிணைந்த குரில் தீவுகளை அப்போதைய சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.

புதின் பயணம்

சோவியத் ஒன்றியம் கலைந்த பிறகு ரஷியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த குரில் தீவுகளை மீட்பதற்கு ஜப்பான் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. மேலும், கடந்த சில ஆண்டுகளாக அந்த தீவுகளில் ரஷிய ராணுவத்தின் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், குரில் தீவுகளின் தெற்கில் அமைந்துள்ள இத்துருப் தீவுக்கு ரஷிய அதிபர் புதின் இன்று (ஆக. 13) முதல்முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அந்தத் தீவில் அமைந்துள்ள மீன்வளத் தொழிற்சாலை, மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடம் ஆகியவற்றிருக்கு அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஜப்பான் கண்டனம்

ரஷிய அதிபர் புதினின் இத்துருப் பயணத்துக்கு ஜப்பான் அரசு கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கூறிய ஜப்பான் வெளியுறவு மந்திரி தோஷிமிட்சு மோட்டேகி, "இத்துருப் உள்ளிட்ட வடக்குப் பிரதேசங்கள் வரலாற்று ரீதியாகவும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும் ஜப்பானின் பகுதிகள் என்றார்.

2 ஆம் உலகப்போரின் போது சோவியத் யூனியனால் கைப்பற்றப்பட்ட இத்தீவுக்கு புதின் சென்றது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஜப்பானியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்றும் ஜப்பான் பிரதமர் சனாயே தகாய்ச்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக ரஷியாவின் தூரக் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள இந்த தீவுக் கூட்டம் ஜப்பான் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உரசல் புள்ளியாக இருந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com