வடகொரியா மற்றும் சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஜப்பான்-அமெரிக்க படைகள் கூட்டுப்போர் பயிற்சி

ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் ராணுவ படைகள் மிகப்பெரிய அளவிலான கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கியுள்ளன.
வடகொரியா மற்றும் சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஜப்பான்-அமெரிக்க படைகள் கூட்டுப்போர் பயிற்சி
Published on

டோக்கியோ,

வடகொரியா மற்றும் சீனாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஜப்பானின் தெற்கு பகுதியில் ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் படைகள் நேற்று மிகப்பெரிய கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின. இந்த கூட்டுப் பயிற்சி வரும் 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த போர் பயிற்சிக்கு 'கூர்மையான வாள்'(Keen Sword) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சுமார் 26 ஆயிரம் ஜப்பான் வீரர்களும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க வீரர்களும் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com