அமெரிக்காவில் டிக்டாக் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்கள் தடையை திரும்ப பெற்றார் ஜோ பைடன்

அமெரிக்காவில் டிக்டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான ஆணையை அதிபர் ஜோ பைடன் திரும்ப பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் டிக்டாக் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்கள் தடையை திரும்ப பெற்றார் ஜோ பைடன்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை அமெரிக்காவில் தடை செய்வதற்கான நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன், பதவியேற்றது முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். இதற்கிடையில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களையும் அவர் செய்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக அவர் செய்துள்ள மாற்றங்கள் குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

அந்த வகையில் முன்னாள் அதிபர் டிரம்ப் பிறப்பித்திருந்த டிக்டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான ஆணையை அதிபர் ஜோ பைடன் திரும்ப பெற்றுள்ளார். மேலும் டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் அமெரிக்க பயனாளர்களின் தகவல்களை திருடுவதாக முந்தைய அரசு குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த செயலிகளுக்கான புதிய விதிகளை உருவாக்க விரிவான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com