மூன்று சகோதரிகளை காதல் திருமணம் செய்த வாலிபர் ; அட்டவணை போட்டு குடும்பம்!

கேட், ஈவ் மற்றும் மேரி என்ற மூன்று சகோதரிகள் கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற வாலிபரை திருமணம் செய்து கொண்டனர்.
மூன்று சகோதரிகளை காதல் திருமணம் செய்த வாலிபர் ; அட்டவணை போட்டு குடும்பம்!
Published on

கென்யாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒரே நேரத்தில் பிறந்த 3 சகோதரிகளை திருமணம் செய்து கொண்டார். வாலிபர் ஒருவர் 3 பெண்களை அதுவும் சகோதரிகளை திருமணம் செய்து கொண்டது சமூகவலைதலங்களில் வைரலாகி உள்ளது.

வாரம் தோறும் அவர் அட்டவணை போட்டு மனைவிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

கேட், ஈவ் மற்றும் மேரி என்ற மூன்று சகோதரிகள் கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற வாலிபரை திருமணம் செய்து கொண்டனர்.

திங்கட்கிழமைகள் மேரிக்கும், செவ்வாய்க் கிழமைகள் கேட்டிற்கும், புதன் கிழமைகள் ஏவிற்கும் உரியது என்று அவர் கூறினார். இதற்கிடையில், சகோதரிகள் தங்கள் குடும்பத்தை விரிவுபடுத்த விரும்புகிறார்களா என்று உறுதியாக தெரியவில்லை.

நாங்கள் மூவரும் அவருக்கு போதுமானவர்கள், அவர் மேலும் இன்னொருவரை அழைத்து வர அனுமதிக்க மாட்டோம்" என்று மூவரும் கூறினர்.

பலதார மணம் என்பது ஒரு சமூக மற்றும் திருமண நடைமுறையாகும், இதில் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கொண்டுள்ளார். பலதார மணம் என்பது பல மனைவிகளைக் கொண்ட குறிப்பிட்ட நடைமுறையாகும், அதே சமயம் பாலியண்ட்ரி என்பது பல கணவர்களைக் கொண்ட குறிப்பிட்ட நடைமுறையாகும். இந்த நடைமுறை சர்ச்சைக்குரியது மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் சட்டவிரோதமானது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com