பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 7.2 ஆக பதிவு

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோளில் 7.2 ஆக பதிவாகி உள்ளது.
பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 7.2 ஆக பதிவு
Published on

போர்ட் மோர்ஸ்பை,

பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலநடுக்கம் புலோலோவின் தென்கிழக்காக 33 கிமீ தூரத்திலும், நாட்டின் கிழக்கே, 127 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் தலைநகரான போர்ட் மோர்ஸ்பையில் இருந்து 250 கிமீ தொலைவில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com