கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்கும் - உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்கும் - உலக சுகாதார அமைப்பு
Published on

ஜெனீவா, சுவிட்சர்லாந்து:

கொரோனா வைரஸ் நீண்ட காலத்திற்கு இந்த கிரகத்தில் இருக்கும். பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய கொரோனா வைரஸைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்த சில நாடுகள் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் ஆப்பிரிக்காவிலும்,அமெரிக்காவிலும் சிக்கலான போக்குகள் உள்ளன.

பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பாதிப்புகள் அதிகரித்து வருவதையே பார்க்கிறோம்.

எந்த தவறும் செய்யாதீர்கள் நான் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த வைரஸ் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றை ஜனவரி 30 அன்று நாங்கள் அவசரகாலம் சரியான நேரத்தில் அறிவித்தோம். உலகம் பதிலளிக்க போதுமான நேரம் உள்ளது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com