சீனாவில் தியாகிகள் தினம் அனுசரிப்பு - தியான்மென் சதுக்கத்தில் அதிபர் ஜி ஜின்பிங் அஞ்சலி

பெய்ஜிங் நகரத்தில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் மறைந்த தேசிய வீரர்களுக்கு அதிபர் ஜி ஜின்பிங் மலர் அஞ்சலி செலுத்தினார்.
சீனாவில் தியாகிகள் தினம் அனுசரிப்பு - தியான்மென் சதுக்கத்தில் அதிபர் ஜி ஜின்பிங் அஞ்சலி
Published on

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டர்ம்பர் 30-ந் தேதியன்று தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சீனாவில் இன்று நாடு முழுவதும் தியாகிகள் மற்றும் மறைந்த தேசிய வீரர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அந்த வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும், இன்று பெய்ஜிங் நகரத்தில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் மறைந்த தேசிய வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். பெய்ஜிங் மட்டுமல்லாது சீனாவின் அனைத்து நகரங்களிலும் உள்ள நினைவு மண்டபங்கள், வரலாற்றுத் தளங்கள் மற்றும் தியாகிகளின் கல்லறைகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com