ஆப்கானிஸ்தானில் மகப்பேறு மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல்; 2 குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் மகப்பேறு மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல்; 2 குழந்தைகள் உள்பட 16 பேர் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றால் 4 ஆயிரத்து 900 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 127 பேர் பலியாகி உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க அந்நாட்டில் வசித்து வரும் பயங்கரவாத குழுக்கள் அரசுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஒன்றுமறியாத குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட குடிமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

நாள்தோறும் தாக்குதல் தொடரும் நிலையில், காபூல் நகரின் மேற்கே அமைந்த மகப்பேறு மருத்துவமனைக்குள் பயங்கரவாதிகள் சிலர் புகுந்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் பல மணிநேரம் இரு தரப்புக்கிடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த தாக்குதலில் 2 குழந்தைகள், அவர்களின் தாயார்கள் மற்றும் எண்ணற்ற செவிலியர்கள் உள்பட 16 பேர் பலியாகினர். சண்டை நடந்தபொழுது, குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயார்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் பணியில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

இதுபற்றி அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், மகளிர் மற்றும் குழந்தைகள் என 100 பேர் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். அவர்களில் 3 பேர் வெளிநாட்டினர். இந்த தாக்குதலில், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் என 15 பேர் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்துள்ளது. பின்னர் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டு விட்டனர் என மற்றொரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com