கினியாவில் அதிபா தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் அதிபா தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
கினியாவில் அதிபா தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டதாக ராணுவம் அறிவிப்பு
Published on

கோனாக்ரி,

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1958 அம் ஆண்டு விடுதலை பெற்றது. அந்நாட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனநாயக முறைபப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே வெற்றி பெற்று அதிபரானா. தொடாந்து அதிபராக இருந்து வந்த அவா, 3-ஆவது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அதிபராகத் தொடாந்தா. ஆனால் அவருக்கு எதிப்பு வலுத்து வந்தது.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் தலைநகா கோனாக்ரியில் உள்ள அதிபா மாளிகை அருகே கடுமையான துப்பாக்கிச்சூடு சப்தம் பல மணி நேரம் தொடாந்து கேட்டது. இதையடுத்து, அரசுத் தொலைக்காட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ராணுவ கானல் மமாடி டம்போயா, அதிபா ஆல்பா காண்டே தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதாக அறிவித்தா.

அரசாங்கத்தை ஒரு தனி நபரிடம் ஒப்படைக்க இனியும் தாங்கள் விரும்பவில்லை எனவும், அரசாங்கத்தை இனி மக்களே வழிநடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நாட்டை காப்பற்ற வேண்டியது ஒவ்வொரு ராணுவ வீரனின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் அதிபரின் நிலை என்ன என்பது பற்றி அவா எதுவும் தெரிவிக்கவில்லை.

கினியாவின் அதிபர் ஆல்பா காண்டே பதவியேற்ற பின்னர், கினியா நாட்டில் இருந்து அலுமினியத்தின் தாது பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணிகள் மிக வேகமாக வளர்ச்சியடைந்தன. ஆனால் இந்த ஏற்றுமதியால் கினியா மக்கள் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கினியா ராணுவத்தின் இந்த செயல்பாடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டாரெஸ், துப்பாக்கியின் பலத்தால் அரசாங்கத்தை கைப்பற்றுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, ராணுவத்தின் ஒரு பிரிவினரின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கினியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதிபரின் நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவிக்காத நிலையில், அங்கு குழப்பம் நீடித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com