மாலி நாட்டில் நில கண்ணிவெடி தாக்குதலில் 26 பேர் பலி

மாலி நாட்டில் நில கண்ணிவெடி ஒன்று வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர். #explosion
மாலி நாட்டில் நில கண்ணிவெடி தாக்குதலில் 26 பேர் பலி
Published on

பமகோ,

மாலி நாட்டில் பொதுமக்களை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பர்கினோ பசோ நாட்டு மக்கள் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், எல்லை பகுதியருகே அந்த வாகனத்தினை ஐ.எஸ். அமைப்பின் தீவிரவாதிகள் நில கண்ணிவெடி ஒன்றை கொண்டு வெடிக்க செய்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த 26 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து உள்ளனர்.

கடந்த 3 வருடங்களுக்கு முன் மாலியின் வடக்கே பாலைவன பகுதியில் தனது ஆதிக்கத்தினை செலுத்தி வந்த ஐ.எஸ். குழுக்கள் தெற்கு பகுதியில் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளில் தனது ஆதிக்கத்தினை செலுத்த தொடங்கியுள்ளது.

#explosion #landmine

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com