

டகார்,
செனெகல் நாட்டின் தெற்கே காசாமன்ஸ் பகுதியில் அமைந்த சுரங்கம் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், சிக்கி 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த சுரங்க வெடிவிபத்தில் 5 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 2 பேர் படுகாயமடைந்து உள்ளனர். இந்த சுரங்கம் சமீபத்தில் ஏற்படுத்திய சுரங்கங்களில் ஒன்றா? அல்லது கனமழையால் வெளிப்பட்ட பழைய சுரங்கங்களில் ஒன்றா? என சரியாக தெரியவில்லை.