மாஸ்கோவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் புதின் பங்கேற்றார்

உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை ரஷியா கைப்பற்றியதன் 8-வது ஆண்டு விழாவையொட்டி, லுஸ்னிகி மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடந்தது.
Image Courtesy: THE Sun
Image Courtesy: THE Sun
Published on

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷிய படைகள் தீவிர தாக்குதல் தொடுத்து வரும் வேளையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொண்டார்.

உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை ரஷியா கைப்பற்றியதன் 8-வது ஆண்டு விழாவையொட்டி, லுஸ்னிகி மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடந்தது.

மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் திரண்டிருந்ததாக மாஸ்கோ போலீசார் தெரிவித்தனர். அத்துடன் இசை நிகழ்ச்சியும் நடந்தது. பிரபல பாடகர் ஒலெக் காஸ்மனோவ் பங்கேற்று பாடினார்.

இதில் கலந்து கொண்ட புதினை உக்ரைனில் நாஜியிசத்தை எதிர்த்து புதின் போராடுகிறார் என்று பலர் பாராட்டி பேசினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com