திடீரென பாய்ந்து நடைபாதையில் கவிழ்ந்த கார்.. நூலிழையில் உயிர்தப்பிய பெண்

நடைபாதையில் உள்ள கம்பத்தில் மோதி, சரியாக அந்த பெண்ணின் முன்னால் கவிழ்ந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
திடீரென பாய்ந்து நடைபாதையில் கவிழ்ந்த கார்.. நூலிழையில் உயிர்தப்பிய பெண்
Published on

லண்டன்:

இங்கிலாந்தின் சோலிஹல் நகரில், ஒரு பெண் தனது குழந்தையை பேபி கேர் வண்டியில் வைத்து சாலையோர நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார், தனது பாதையைவிட்டு விலகி திடீரென அந்த பெண்ணின் முன்னால் கவிழ்ந்தது. இதனால் தாயும், குழந்தையும் வாகனத்தின் அடியில் சிக்கியிருக்கலாம் என அங்கிருந்தவர்கள் பதறியடித்து மீட்பதற்காக விரைந்து சென்றனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக தாயும் குழந்தையும் காயமின்றி நூலிழையில் உயிர்தப்பினர். காரை ஓட்டி வந்த பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது. நடைபாதையில் உள்ள கம்பத்தில் மோதி, சரியாக அந்த பெண்ணின் முன்னால் கவிழ்ந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com