ராணி எலிசபெத் மறைவு: நேபாள அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக நேபாள அரசு முடிவு செய்துள்ளது.
ராணி எலிசபெத் மறைவு: நேபாள அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
Published on

காத்மாண்டு:

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல குறைவு காரணமாக காலமானார். தனது 25 வயதில் ராணியாக பதவியேற்ற எலிசபெத் ராணி சுமார் 70 ஆண்டுகாலம் ராணியாக பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில் உலக தலைவர்கள் பலர் மகாராணி இறப்பிற்கு இரங்கல் தெர்வித்து வருகின்றனர். இந்நிலையில் நேபாள அரசானது இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.

மேலும் செப்டம்பர் 10 (இன்று) முதல் செப்டம்பர் 12-ந் தேதி வரை துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நேபாள தூதரகங்கள் மற்றும் தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com