கொரோனா நோய்க்கு எதிராக புதிய ஆன்டிவைரல் மருந்து கலவை -ஆய்வில் தகவல்

கொரோனா நோய்க்கு எதிராக புதிய ஆன்டிவைரல் மருந்து கலவையை ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
கொரோனா நோய்க்கு எதிராக புதிய ஆன்டிவைரல் மருந்து கலவை -ஆய்வில் தகவல்
Published on

பெய்ஜிங்

ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஹாங்காங்கில் உள்ள ஆறு பொது மருத்துவமனைகளில் நோய் பாதிக்கப்பட்ட 127 பெரியவர்களுக்கு புதிய ஆன்டிவைரல் மருந்து கலவை கொடுத்து சோதனை நடத்தினர். அவர்களின் உடலில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கலவையின் செயல்திறனை சோதனை நடத்தினர்.

மூன்று மருந்து கலவையுடன் சிகிச்சையானது வைரஸ் சுமைகளை திறம்பட ஒடுக்கியது, சிகிச்சையைத் தொடங்கிய சராசரியாக ஏழு நாட்களுக்குள் நாசித் துணியில் வைரஸ் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இன்டர்ஃபெரான் பீட்டா -1 பி, மற்றும் ஆன்டிவைரல் தெரபி லோபினாவிர்-ரிடோனாவிர் மற்றும் ரிபாவிரின் ஆகியவற்றின் கலவையை உள்ளடக்கிய சிகிச்சை ஆகும். லோபினாவிர்-ரிடோனாவிரை விட வைரஸ் சுமைகளை குறைப்பதில் சிறந்தது.இது லேசான மற்றும் மிதமான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே சிறந்தது.

லோபினாவிர்-ரிடோனவீருடன் மட்டும் ஒப்பிடும்போது, அறிகுறிகளைக் காட்டிய ஏழு நாட்களுக்குள் மூன்று முறை மருந்து கொடுத்து சிகிச்சையளிக்கப்பட்டவர்களில் மருத்துவ முன்னேற்றம் காணப்பட்டது. இதனால் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் கணிசமாகக் குறையலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மோசமான நோயாளிகளில் இந்த மூன்று கலவையின் செயல்திறனை ஆராய பெரிய கட்ட 3 சோதனைகளின் அவசியம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அறிகுறிகள் தோன்றத் தொடங்கும் போது நோயாளிகளின் உடலில் அதிக அளவு வைரஸ் இருக்கும் இன்ஃப்ளூயன்ஸா குறித்த முந்தைய ஆய்வுகளின் அடிப்படையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல வைரஸ் தடுப்பு மருந்துகளின் கலவையுடன் சிகிச்சையளிப்பது ஒற்றை மருந்து சிகிச்சையை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கூறினர்.

இந்த ஆய்வு அறிக்கை தி லான்செட் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com