சியோலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரவு சந்தை திறப்பு...!

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு சியோலின் முக்கிய இரவு நேர சந்தை மீண்டும் செயல்பட அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
file photo
file photo
Published on

சியோல்,

தென்கொரியா நாட்டில் சுற்றுலாப் பயணிகளைக் கவரவும், சிறு விற்பனையர்களுக்கு அதிக வணிக வாய்ப்புகளை வழங்கவும் பல்வேறு இடங்களில் சியோல் பெருநகர அரசு இரவு சந்தைகளை இயக்கியது.

இந்தநிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு சியோலின் முக்கிய இரவு சந்தை மீண்டும் இயங்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

இரவு சந்தைகளில் பங்கேற்க விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்களை ஆட் சேர்ப்பு செய்யத் தொடங்கியுள்ளதாக நகர அரசு கூறியது. இதற்கான இருப்பிடங்கள் மற்றும் தொடக்க அட்டவணை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இரவு சந்தை மாலை 6 மணி முதல் செயல்படத் தொடங்கும், ஹாங்காங் பார்க், டோங்டே முன் டிசைன் பிளாசா மற்றும் சியோங்கி பிளாசா.போன்ற இடங்களில் நள்ளிரவு வரை இயங்கும் என கூறப்படுகிறது.

உள்ளூர் வணிகங்களை அதிகரிக்கவும், இளம் வணிக உரிமையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கவும் இரவுச் சந்தை பயனுள்ளதாக இருக்கும் என்று உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com