

தெஹ்ரான்,
ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து தென்மேற்கே ரோபட் கரீம் என்ற இடத்தில் 3 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று இருந்துள்ளது. இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 9 பேர் காயமடைந்து உள்ளனர். வாயு கசிவு மற்றும் ஹீட்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி விசாரணையும் நடந்து வருகிறது.