நெதர்லாந்தில் கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலி; 4 பேர் காயம்

நெதர்லாந்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
நெதர்லாந்தில் கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலி; 4 பேர் காயம்
Published on

ஆம்ஸ்டர்டாம்,

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் பெர்டினான்ட் போல் என்ற தெருவில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஆம்ஸ்டெல்வீன் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பயங்கரவாத நோக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான நேரடி அடையாளம் எதுவும் இல்லை என ஆம்ஸ்டர்டாம் போலீசார் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com