

லண்டன்
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஐந்து நிமிடங்களுக்குள் கொரோனா வைரஸை அடையாளம் காணக்கூடிய விரைவான கொரோனா சோதனையை உருவாக்கியுள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்து உள்ளனர், இது விமான நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வெகுஜன சோதனைக்கு பயன்படுத்தப்படலாம்.
2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சோதனை கருவியின் தயாரிப்பு தொடங்குவதாகவும், ஆறு மாதங்களுக்கு பிறகு ஒரு அங்கீகரிக்கப்பட்ட சாதனம் கிடைக்கும் என்றும் நம்புவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.