

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வருகிற 30-ந் தேதி சட்டசபை தேர்தலை நடத்த அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை மீறியும் தேர்தல் ஆணையம் பஞ்சாப் சட்டசபை தேர்தலை ஒத்திவைத்தது.
பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசு இதை வரவேற்றுள்ளது. இதனையடுத்து ஷபாஸ் ஷெரீப், தேர்தல் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்டோர் மீது சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.