

இஸ்லாமாபாத்,
ஆண்டுதோறும் பிப்ரவரி 5-ந் தேதி, காஷ்மீர் ஆதரவு தினமாக பாகிஸ்தானில் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை இந்தியா திரும்பப்பெற வேண்டும். காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பார்வையிட சர்வதேச அமைப்புகளை அனுமதிக்க வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தனது தீர்மானங்கள் அடிப்படையில், காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதி தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். பா.ஜனதா அரசின் போர் மிரட்டலை முறியடிப்போம். காஷ்மீர் மக்களுக்கு தார்மிக, அரசியல் ஆதரவு அளிப்போம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம், ஒருமனதாக நிறைவேறியது.