குல்பூஷண் ஜாதவ், சீராய்வு மனு தாக்கல் செய்ய மறுத்துவிட்டார்- பாகிஸ்தான் கூடுதல் அட்டர்னி ஜெனரல்

பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவ், சீராய்வு மனு தாக்கல் செய்ய மறுத்துவிட்டதாக அந்நாட்டின் கூடுதல் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.
குல்பூஷண் ஜாதவ், சீராய்வு மனு தாக்கல் செய்ய மறுத்துவிட்டார்- பாகிஸ்தான் கூடுதல் அட்டர்னி ஜெனரல்
Published on

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், சீராய்வு மனு தாக்கல் செய்ய மறுத்துவிட்டதாக அந்நாட்டின் கூடுதல் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் (வயது 49), தங்கள் நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதுடன் உளவு வேலையிலும் ஈடுபட்டார் என்பது பாகிஸ்தானின் குற்றச்சாட்டு. அதன் அடிப்படையில் அவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி பலுசிஸ்தான் மாகாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் எனவும் பாகிஸ்தான் கூறியது.

2017ஆம் ஆண்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை விதித்தது. சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டதால், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதுடன் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கூடுதல் அட்டர்னி ஜெனரல் அகமது இர்பான், தண்டனையை எதிர்த்துச் சீராய்வு மனு தாக்கல் செய்யக் குல்பூஷண் ஜாதவ் மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார்.

குல்பூஷண் ஜாதவ் தனது குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்வதற்கும் மறுபரிசீலனை செய்வதற்கும் ஒரு மனுவை தாக்கல் செய்ய மறுத்துவிட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. குல்பூஷண் ஜாதவுக்கு இரண்டாவது தூதரக அணுகலுக்கு பாகிஸ்தான் இப்போது இந்தியாவை அழைத்துள்ளது.

நிலுவையில் உள்ள கருணை மனுவைத் தொடர்ந்து வலியுறுத்துவதையே அவர் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com