அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் பைசர் தடுப்பூசி போடப்படுகிறது?

அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் பைசர் தடுப்பூசி போடப்படுகிறது?
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பயோன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இதை அமெரிக்காவில் அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் கோரி விண்ணப்பித்து இருந்தன.

இந்த நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறையின் ஆலோசனை கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில், 17 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 4 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், பெரும்பான்மை அடிப்படையில், பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் வரும் திங்கள் கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடப்படலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை செயலர் அலெக்ஸ் அசார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com