ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அச்சம்

ஜப்பானில் டோஹோகு நகரில் சாலைகளில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால், கார்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன.
ஜப்பானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அச்சம்
Published on

டோக்கியோ,

ஜப்பான் ஷிமானே மாகாணத்தில் இன்று (ஜன.6) அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. ஜப்பானை உலுக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஷிமானே மாகாணத்தில் வசிப்பவர்கள் கடுமையான நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அங்குள்ள ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஷிமானே மாகாணத்தின் கிழக்குப் பகுதி நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது என்றும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் அங்குள்ள நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர், மேலும் பின்அதிர்வுகள் உட்பட ஏதேனும் சாத்தியமான விளைவுகள் உள்ளதா என்பது குறித்து மதிப்பீடு செய்து வருகின்றனர். ஏற்கனவே அடிக்கடி ஏற்படும் நில அதிர்வு நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்ற தெற்கு ஜப்பானை பல பூகம்பங்கள் உலுக்கிய சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது.

இதனிடையே நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் டோஹோகு நகரில் சாலைகளில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால், கார்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்துள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com