ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக அறிவித்த ஈரான்; எரிபொருள் விலை மீண்டும் உயரும் அபாயம்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சமீபத்தில் கொஞ்சம் சரிந்த நிலையில், தற்போது மீண்டும் விலை எகிறியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக அறிவித்த ஈரான்; எரிபொருள் விலை மீண்டும் உயரும் அபாயம்
Published on

உலக எண்ணெய் வர்த்தகத்தின் இதயமாக கருதப்படும் ஹார்முஸ் நீரி ணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்போர் தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி 3 மாதங்களுக்கு ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது.

இதனால் உலகநாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பல நாடுகளில் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹார் முஸ் நீரிணை திறக்கப்பட்டநிலையில் தற்போது மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் உயர்ந்து பெட்ரோல், டீசல் விலை எகிறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com