லிபியாவில் அகதிகள் படகு நீரில் கவிழ்ந்து விபத்து - 27 பேர் பலி

லிபியாவில் அகதிகள் படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகியுள்ளனர்.
லிபியாவில் அகதிகள் படகு நீரில் கவிழ்ந்து விபத்து - 27 பேர் பலி
Published on

லிபியாவி,

வட ஆப்பிரிக்கா நாட்டின் லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான அல்-அவுஸ் நகருக்கு அருகே அகதிகள் படகுகள் கடலில் சென்று கொண்டிருந்தது. படகுகள் சென்ற சிறிது நேரத்தில் திடீரென நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 27 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். பலர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com