அமெரிக்காவில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட இந்திய சிறுவன் மீட்பு..!

அமெரிக்காவில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட இந்திய சிறுவன் மீட்கப்பட்டார்.
அமெரிக்காவில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட இந்திய சிறுவன் மீட்பு..!
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் சீனிவாச மூர்த்தி ஜொன்னலகடா. இந்திய வம்சாவளியான இவர் விடுமுறையை கொண்டாடுவதற்காக சாண்டா குரூஸ் பகுதியில் உள்ள பாந்தர் ஸ்டேட் கடற்கரைக்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது அவரது 12 வயது மகன் கடலில் குளித்துக்கொண்டிருந்தான். திடீரென எழும்பிய ராட்சத அலையில் அவன் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டான்.

இதனையடுத்து சீனிவாச மூர்த்தி வேகமாக கடலுக்குள் இறங்கி தனது மகனை காப்பாற்றினார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் துரதிர்ஷ்டவசமாக கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சீனிவாச மூர்த்தி உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com