ரஷிய தாக்குதல்; உக்ரைனில் 4 பேர் பலி

ரஷிய தாக்குதலில் உக்ரைனில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
ரஷிய தாக்குதல்; உக்ரைனில் 4 பேர் பலி
Published on

கீவ்,

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் ஓராண்டை கடந்து தொடர்ந்து கொண்டு வருகிறது. இதில் இரு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வராமல் நீட்டித்து வருகின்றன.

இந்த நிலையில், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், உக்ரைனில் நடந்த ரஷிய ஏவுகணை தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் காயம் அடைந்து உள்ளனர் என கீவ் நகர நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்து விட்டன என்றும் தெரிவித்து உள்ளது. உக்ரைனின் மேற்கத்திய நகரில் நடந்த மிக பெரிய தாக்குதல் இது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com