

கடந்த வாரம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பின்போது, பிராட்பேண்ட் இணைய செயற்கைக்கோள்கள் ஏவப்படும் வேளையில் உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் விண்வெளி ஏவுதளத்தை தாக்க முயற்சி செய்து வருவதாக ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி பகானோவ் வெளிப்படுத்தினார்.மாஸ்கோ,
இன்று ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான விண்கலத்தை ஏந்தி செல்லும் சோயுஸ்-2.1பி ஏவுகணையை, ரஷ்யாவின் விண்வெளி படைகள் இன்று பிளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தியதாக, அரசு விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்தது.
ஏவப்பட்ட பிறகு, சோயுஸ்-2.1பி ஏவுகணையானது, விண்வெளி ஏவுதளத்தின் தரைவழி அளவீட்டு வளாகத்தால் கண்காணிப்பிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஏவுதல் வழக்கம் போல் நடைபெற்றது, என்று ரோஸ்கோஸ்மோஸ் டெலிகிராமில் கூறியது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கான மூன்று செயற்கைக்கோள் ஏவுதல்கள் ஏற்கனவே பிளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த வாரம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பின்போது, பிராட்பேண்ட் இணைய செயற்கைக்கோள்கள் ஏவப்படும் வேளையில் உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் விண்வெளி ஏவுதளத்தை தாக்க முயற்சி செய்து வருவதாக ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி பகானோவ் வெளிப்படுத்தினார்.