ரஷிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்: பேச்சுவார்த்தையில் உக்ரைன் வலியுறுத்தல்

பெலாரசின் கோமல் நகரில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் போது, ரஷிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.
ரஷிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்: பேச்சுவார்த்தையில் உக்ரைன் வலியுறுத்தல்
Published on

கோமல்,

ரஷியா- உக்ரைன் போர் 5-வது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷியாவின் அழைப்பை ஏற்று இன்று பேச்சு வார்த்தையில் உக்ரைன் பங்கேற்றுள்ளது. முதலில் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்த உக்ரைன், வேறு சில இடங்களை பரிந்துரைத்து இருந்த நிலையில், தனது முடிவில் இருந்து சற்று பின் வாங்கி பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது.

இதன்படி, பெலாரசில் உள்ள கோமல் நகரில் ரஷியா - உக்ரைன் பிரதிநிதிகள் இடையே பிற்பகல் 3.50 மணிக்கு ( இந்திய நேரப்படி) பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையின் போது, ரஷியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். ரஷிய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com